எங்க நாட்டுக்கு போக விரும்பல – திருச்சியில் கதறிய இலங்கை தமிழர்கள்! ஏர்போர்ட் செல்லும் வழியில் பரபரப்பு!
திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களான முகமது சாஹிப் அவரது மனைவி பாத்திமா மற்றும் அவருடைய 2 குழந்தைகளையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டுள்ளது. இலங்கைக்கு சென்றால் தங்களது உயிருக்கு ஆபத்து எனக்கூறி அவர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு செல்ல மறுத்துவிட்டனர். இந்நிலையில் அரசு உத்தரவின் படி அவர்களை இலங்கைக்கு அனுப்ப போலீசார் முயன்றனர். ஆனால் அவர்கள் செல்ல மறுத்து விட்டனர். இதனால் மொத்த குடும்பத்தையும் வலுக்கட்டாயமாக திருச்சி விமான நிலையத்திற்கு காவல்துறையினர் இழுத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed.