திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் குடிநீர் குழாயில் யாத்திரி நிவாஸ் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை சரி செய்யும் பணி நாளை (11.06.2025) அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக மத்திய சிறைச்சாலை, சுந்தரராஜ நகர், ஜே.கே. நகர், செம்பட்டு, இபி காலனி, காஜாமலை, ரெங்காநகர், சுப்ரமணிய நகர், வி.என். நகர், தென்றல் நகர், கவிபாரதி நகர், காமராஜ் நகர், கிராப்பட்டி, அன்பு நகர், எடமலைப்பட்டிபுதூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், அரியமங்கலம், மலையப்பநகர், ரயில்நகர், முன்னாள் இராணுவத்தினர் காலனி, மேல கல்கண்டார் கோட்டை, செக்ஸன் ஆபிஸ், நாகம்மைவீதி, பொன்னேரிபுரம், அம்பேத்கர் நகர், விவேகானந்தர் நகர், எல்.ஐ.சி.காலனி, கே.சாத்தனூர், ஆனந்த நகர், விஸ்வநாதபுரம் மற்றும் சுப்ரமணிய நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் விநியோகம் 12.06.2025 ஒரு நாள் இருக்காது. 13- ம் தேதி அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அதில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments are closed.