திருச்சி காஜாமலை ஆர்பிஎப் வழியாக கே.கே நகர் செல்லும் குடோன் சாலையில் கடந்த 15 நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது .மேலும் இரவு நேரங்களில் மிகவும் அதிகளவில் தண்ணீர் வெளியேறி வருகிறது. நீண்ட நாட்களாகவே தண்ணீர் வெளியேறுவதால் அந்த சாலையில் இருந்த பள்ளங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதனால் அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.