வரி இல்லாமல் தங்க நகை வேணுமா? திருச்சியில் ஆசை வார்த்தை கூறி ரூ.4 லட்சம் மோசடி! கேடி ஜோடியை தேடுது போலீஸ்!
திருச்சி, உறையூர் சண்முகா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி ஜோதி (வயது 41). இவருக்கு சேலத்தை சேர்ந்த துரை மற்றும் அவரது மனைவி உமா ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர், சேதாரம் இல்லாமல் தங்க நகைகளை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, ஜோதிடம் இருந்து ரூபாய் 4 லட்சம் பணத்தை வாங்கியுள்ளனர். நீண்ட நாட்களாகியும் கூறியபடி தங்க நகையை வாங்கி தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அரசு மருத்துவமனை போலீசில் ஜோதி புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் கணவன்,மனைவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.