Rock Fort Times
Online News

டிஎஸ்பி பதவி உயர்வுக்காக காத்திருப்பு ! முதல்வர் கவனிப்பாரா?

வேலை அதிகம்! பலன் குறைவு !!என்பது காலம் காலமாக காவல் துறைக்கு எழுதப்படாத விதி. ஆட்சிகள் பல காட்சிக்கு வந்தாலும் காவல்துறையினருக்கு மனக்குமுறல் என்பது இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது .எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் போலீசார் திடீர் ஸ்டிரைக் செய்தனர் .அதையும் மீறி போலீஸ் பாதுகாப்பு இல்லாமலேயே எம்ஜிஆர் ஊர் ஊராக வலம் வந்தார். அதன் பிறகு போலீசாருக்கு என சங்கம் வேண்டும் என்று மறைமுகமாக போலீசார் செயல்பட்டு வந்தனர் . அது கைகூடவில்லை என்றாலும் காவல்துறையில் பல நிலைகளிலும் ஒவ்வொரு பிரிவுகளிலும் பதவி உயர்வு கேட்டு காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே தான் இருக்கிறது .அவர்கள் அனைவருமே மன உளைச்சலுடன் பணிபுரியும் கால சூழ்நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சில பிரிவுகளில் தவணை முறையில் பதவி உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது. உதாரணமாக
1994 – 95 ஆம் ஆண்டுகளில் 1100 பேர் நேரடி காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வு நடந்து கொண்டிருந்தது, ஏற்கனவே பணியிலிருந்த காவலர்கள் நீதிமன்றத்தை நாடினர் டிகிரி முடித்து 5 ஆண்டுகள் பணி நிறைவடைந்த காவலர்களுக்கு தகுதி அடிப்படையில் 20 சதவிகிதம் நேரடி காவல் உதவி ஆய்வாளர் பணி வழங்க உத்தரவுப் பெற்று 20 சதவிகிதம் கோட்டா என ஒரு 237 பேர் ஆக மொத்தம் 1337 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் முதலில் 500 பேர்களுக்கு 1996 ஆம் ஆண்டு பயிற்சிக்கான ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ள 837 பேருக்கு அடுத்த 15 நாட்களில் பயிற்சிக்கான இடம் ஏற்பாடு செய்து தருவதாக இருந்த சூழலில் சில காரணங்களுக்காக தாமதம் ஆகிவிட்டது.

1996 வது வருடம் சப் இன்ஸ்பெக்டர் பேட்ச் பயிற்சி முடித்த பின்பு 20 சதவிகிதம் கோட்டாவினருக்கு சென்னை ஆவடி அடுத்த வீராபுரத்திலும், 350 பேருக்கு கோவை தற்காலிக காவல் பயிற்சி கல்லூரியிலும், மீதமுள்ள 237 பேருக்கு சென்னை அசோக் நகர் காவல் பயிற்சி கல்லூரியிலும் 1997 ஆம் ஆண்டு பயிற்சி வழங்கப்பட்டது. அதில் 1996 ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற அனைவரும் தற்போது காவல் துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றனர்.அதில் பலர் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றனர். கோவையில் பயிற்சி பெற்ற உதவி ஆய்வாளர்கள் பாதி பேர் காவல் துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில், வீராபுரம் 20 சதவிகிதம் கோட்டாவினரும் காவல் துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று விட்டனர். சென்னை அசோக் நகர் காவல் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்றவர்களில் 92 பேர் காவல் துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று விட்டனர். மொத்தத்தில் இதுவரை மீதமுள்ளவர்கள் 239 பேர் கடந்த 26 ஆண்டுகளில் ஒரே ஒரு பதவி உயர்வு பெற்று காவல் ஆய்வாளராக பணிபுரிய தொடங்கினர் சுமார் 14 ஆண்டுகளாகி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அத்தனை பேரும் காவல் துணை கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கான முன்பயிற்சியும் முடித்து சுமார் 4 மாதங்களாகியும் டி.எஸ்.பி பதவி உயர்வு உத்தரவுக்காக சொல்ல முடியாத துயரத்தோடு மன உளைச்சலில் பணியாற்றி வருகின்றனர் இதற்கிடையில் சுமார் 15 பேர்கள் பதவி உயர்வு பெறாமல் இறந்து விட்டனர். 2 பேர் விரக்தியில் விருப்ப ஓய்விலும், 1 நபர் 60 வயதாகி ஓய்விலும் சென்றுவிட்டனர். கடந்த 26 ஆண்டு பணியில் ஒரே பதவி உயர்வுடன் மன விரக்தியில் பலவித உடல் மற்றும் மனதளவில் சோர்ந்து போயிருக்கும் 1997ஆம் ஆண்டு நேரடி காவல் உதவி ஆய்வாளர்களுக்கு டி.எஸ்.பி பதவி உயர்வு கிடைத்தால் தான் மன உளைச்சலுக்கு தீர்வு! இந்தப் பிரச்சினையை அரசின் உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி ஐஏஎஸ், காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் மற்றும் தமிழ்நாடு உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் ஐபிஎஸ் ஆகியோர் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பாதிக்கப்பட்ட காவல்துறையினர் எதிர்பார்க்கின்றனர். திமுக ஆட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் மீது காவல்துறையினர் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் நீண்ட நாள் ஏக்கத்தின் துயர் நீக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தயாள குணத்துடன் இந்த பிரச்சனையை கவனத்தில் கொண்டு சட்டசபை கூட்டத் தொடரிலேயே நல்ல அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கின்றனர் . முதல்வர் கவனிப்பாரா?

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்