புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் ராசு மகன் செல்வகுமார்( 26) இவர் சொந்தமாக செங்கல் வியாபாரம் செய்து வருகிறார் நேற்று இரவு அவரது நண்பரை சந்திப்பதற்காக விராலிமலை எம்ஜிஆர் நகருக்கு சென்றுள்ளார் அவரது நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும்போது அந்த வழியாக வந்த விராலிமலை காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் தனி பிரிவு காவலர் சின்ராசு ஆகிய இருவரும் எதற்காக வெளியே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டு திட்டியதாகவும் அப்போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் செல்வக்குமாரை எஸ்.ஐ கோவிந்தராஜ் தாக்கியதாக கூறப்படுகிறது.அதில் செல்வக்குமாருக்கு மூக்கில் ரத்தம் பொல பொல வென கொட்டியுள்ளது. மூக்கில் ரத்த வெள்ளத்துடன் விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வரை மருத்துவமனைக்கு சென்ற எஸ்ஐ கோவிந்தராஜ் நீ இங்கு தங்கக்கூடாது தற்போது கிளம்பு என்றும் விரட்டியதாக கூறப்படுகிறது.
இதில் மன வேதனை அடைந்த செல்வகுமார் நிருபர்களிடம் நடந்தவற்றை கூறி அரசு இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துக் கொண்டார் இது குறித்து அருகில் அவரது நண்பர் சுந்தரபாண்டி கூறியதாவது :எந்த கோவில் திருவிழாவுக்கு சென்றாலும் அடாவடித்தனமாக காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் செயல்படுகிறார். அனைவரையும் அடிக்கிறார் எனவும் கூறினார். இதேபோல் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இதே விராலிமலை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளியான சங்கர் என்பவர் தாக்கப்பட்டு காவல் ஆய்வாளர் பத்மாவதி மற்றும் மூன்று காவலர்கள் சஸ்பென்ஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி இன்று காலையில் இருந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
Comments are closed, but trackbacks and pingbacks are open.