தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.பெரம்பூர் தொகுதியில் ஏற்கனவே அவர் மனுத்தாக்கல் செய்துவிட்ட நிலையில், வருகிற 2 ம் தேதி திருச்சியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்காக 2ம் தேதி காலை திருச்சி வரும் விஜய், மாநகராட்சி மண்டலம்- 2 அலுவலகத்தில் மனு தாக்கல் செய்கிறார். அதனைத் தொடர்ந்து பாலக்கரை, மரக்கடை, கே.கே. நகர் உள்ளிட்ட நான்கு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அனுமதி கோரி செங்கோட்டையன்,திருச்சி டெல்டா மண்டல தேர்தல் பொறுப்பாளர் கு.ப. கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை ஆணையர் காமினி இடம் அனுமதி கோரி மனு அளித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். அனுமதி வழங்குவது குறித்த காவல்துறை ஆணையர் மாலை தகவல் தெரிவிப்பதாக கூறியுள்ளார் என்றார்.

Comments are closed.