விடுதலை – 2 இன்று ( டிச.20 )திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. திருச்சியில் நடைபெறும் புதிய படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள நடிகர் சூரி இத்திரைப்படம் வெளியானதை முன்னிட்டு திரையரங்கிற்கு வருகை தந்தார். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் சூரி., விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்தப் படத்தை கொண்டாடினர். அதேபோல, விடுதலை – 2 வையும் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. விடுதலை- 2 ல் கமர்சியலை தாண்டி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் இருக்கிறது. நல்ல கதை அமைந்தால் சிவகார்த்திகேயனோடு மீண்டும் இணைந்து நடிப்பேன். யார் அதில் ஹீரோ என்பதை சிவகார்த்திகேயன் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் எனக்கு எப்பொழுதும் ஹீரோ என்னுடைய தம்பி சிவகார்த்திகேயன் தான் என்றார்.
Comments are closed.