108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசாமி திருக்கோவிலுக்கு திருச்சி மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இதனால் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லும். இந்தநிலையில் மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டும் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்று வந்தது. வைகை எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் சென்னை-மதுரையிடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் இன்று முதல் (16-ந் தேதி) முதல் சோதனை அடிப்படையில் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை வைகை எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று சென்றது.
முன்னதாக ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் குழுமியிருந்த திமுக, காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் மலர் தூவி வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை வரவேற்றனர். பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.