பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை- * திருச்சி மேயர் மு.அன்பழகன் உறுதி!
திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று( ஜூலை 28) அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் மு.அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.அந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். குறைதீர் கூட்டத்தில் துணை மேயர் திவ்யா தனக்கோடி, ஆணையர் மதுபாலன், நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, ஜெய நிர்மலா, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments are closed.