திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, எப். கீழையூரைச் சேர்ந்த ஒரு பகுதி பொதுமக்கள் திருச்சி கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில் , கூறப்பட்டு இருந்ததாவது:-
எப். கீழையூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்தும் எங்களது பகுதியில் தீண்டாமை நடந்து கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களை தனி ஒரு பகுதியாக பிரித்துப் பார்ப்பதற்காக காலனி என்ற வார்த்தை எங்களது ஊர் பெயரோடு சேர்க்கப்பட்டுள்ளது. இது சட்டத்துக்கு புறம்பான செயலாகும். எங்களுடைய பழைய குடும்ப அட்டை, பழைய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அனைத்து ஆவணங்களிலும எப்.கீழையூர் என்றே உள்ளது. அாியாகவுண்டம்பட்டி என்ற ஊரை எப். கீழையூர் கிழக்கு என்றும் எங்களது பகுதியை எப். கீழையூர் மேற்கு என்றும் மாற்றம் செய்ய தீவிரமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அரசின் பதிவேட்டின் படி ஊர் பெயரை எந்த சூழ்நிலையிலும் மாற்றக்கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.