திருச்சி அய்யப்பன் கோவில் எதிரே சாக்கடைக்குள் அடையாளம் தெரியாத சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் சடலம ஒன்று கிடந்தது .இதுகுறித்து திருச்சி மேற்கு கிராம நிர்வாக அதிகாரி ஸ்டீபன்ராஜ் செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சேரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி சாக்கடைக்குள் விழுந்தார்? எப்படி இறந்தார் ?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.