Rock Fort Times
Online News

திருச்சி துறையூாில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் – போலீசாா் விசாரணை

திருச்சி மாவட்டம் துறையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கொத்தம்பட்டி பாலத்தின் அடியில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக துறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்றனர். அப்போது அங்கு தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் ஆழமான அரிவாள் வெட்டு காயங்களுடன், முகம் சிதைந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். பாலத்தின் மேல் பகுதியில் ரத்தம் உறைந்த நிலையில் கிடந்தது. எனவே அவரை வேறு எங்கேயோ கொலை செய்து, அதனை மறைக்கும் நோக்கில் பாலத்தின் மேற்பகுதியில் இருந்து அடியில் வீசப்பட்டிருக்கலாம் எனவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையுண்ட நபர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சம்பவ இடத்திற்கு திருச்சியில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துறையூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்