அடுத்த கல்வி ஆண்டு (2024-25 ) முதல் 2 ஆண்டு பி.எட் படிப்புக்கு புதிய அனுமதியை கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டாம் என்றும், 4 ஆண்டு
பி.எட் திட்டத்தை நடத்த விரும்பும் கல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இளநிலை பட்டப்படிப்புக்கு 3 ஆண்டுகள், பி.எட் படிப்புக்கு 2 ஆண்டுகள் என 5 ஆண்டுகள் ஆகின்றன. இதற்கு மாற்றாக புதிய கல்விக் கொள்கையின் கீழ் 4 ஆண்டுகளில் இளநிலை பட்டப்படிப்பு, பி.எட் படிப்புடன் கூடிய ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தை (ஐடிஇபி) மத்திய கல்வித் துறை அமைச்சகம் அறிமுகம் செய்தது.
இந்தப் படிப்பில் சேர தேசிய தேர்வு முகமை நடத்தும் பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். அதேநேரத்தில், இன்னும் சில கல்வி நிறுவனங்கள் 2 ஆண்டு பி.எட் படிப்பை தொடர்ந்து வந்தன. இந்தநிலையில் அடுத்த கல்வி (2024-25) முதல் 2 ஆண்டு பி.எட் படிப்புக்கு புதிய அனுமதிகளை கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டாம் என்றும், 4 ஆண்டு பி.எட் திட்டத்தை நடத்த விரும்பும் கல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் இந்திய மறுவாழ்வு கவுன்சில் (ஆர்.சி.ஐ.) அறிவித்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.