Rock Fort Times
Online News

திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி அருகே லாரியில் பற்றிய திடீர் “தீ”சுதாரித்து குதித்ததால் உயிர் தப்பினார் ஓட்டுனர் – (வீடியோ இணைப்பு)

திருச்சி கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான ஸ்டீல் அதார்ட்டி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரில் இருந்து கம்பி ஏற்றிக்கொண்டுவந்தது. பாரம் இறக்குவதற்காக லாரி நின்று கொண்டிருக்கும் போது திடீரென லாரியின் முன்பக்கத்தில் தீ பற்றியது. சுதாரித்துக்கொண்ட டிரைவர் உடனடியாக லாரியிலிருந்து கீழே குதித்ததால் உயிர்தப்பினார். இதுதொடர்பாக தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்தாலும் டிரைவரின் லைசென்ஸ், பான்கார்டு மற்றும் லாரியின் எலக்ட்ரிக் சாதனங்கள் ஆகியவை தீயில் சிக்கி எரிந்துபோனது. இதுதொடர்பாக வழக்குப்பதிந்துள்ள கே .கே.நகர் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்