Rock Fort Times
Online News

திருச்சி உறையூரில் மனிதம் டிரஸ்ட் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு! அமைச்சர் நேரு பங்கேற்பு !

திருச்சி உறையூரில் மனிதம் சமூகப்பணி மையம் & டிரஸ்ட் சார்பில் நேற்று ஏழாம் ஆண்டு நீர் மோர் பந்தல் துவக்க விழா நடந்தது .உறையூர்  மனிதம் முதியோர் இல்லத்திற்கு அருகில்  நடந்த  நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் மாண்புமிகு கே.என். நேரு  கலந்துகொண்டு நீர் மோர் பந்தலினை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்கள் வழங்கினார். இந்த நிகழ்வில் மேயர் மு. அன்பழகன், மனிதம் இயக்குனர் ரா. தினேஷ் குமார், 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ், மனிதம் செயலாளர் தாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்