Rock Fort Times
Online News

திருச்சி, வயலூர் முருகன் கோவில் நிர்வாக அதிகாரிக்கு பாராட்டு சான்றிதழ் – கலெக்டர் பிரதீப்குமார் வழங்கினார்…!

பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றும் அரசுத்துறை அலுவலர்களுக்கு சுதந்திர தின நன்னாளில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம்.  அந்தவகையில்,  15-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற 78- வது சுதந்திர தின விழாவில்  திருச்சி, வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் அருண் பாண்டியனுக்கு அவரது பணி தன்மையை பாராட்டி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்