திருச்சி உறையூர் ராமலிங்க நகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகர். இவரது மகன் சன்வந்த் (ஒன்றரை வயது). இந்த குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது துரதிஷ்டவசமாக வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது. இதில் மூழ்கிய குழந்தையை உடனடியாக மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர் .இது குறித்து அவரது தாய் திவ்யபாரதி கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.