திருச்சி மாநகரில் கண்டோன்மென்ட், திருவரங்கம், உறையூர் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி தொடர்ந்து திருடு போன வண்ணம் உள்ளன. இதுகுறித்து வந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் அந்தந்த சரகங்களில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி கன்டோன்மென்ட் பகுதி ரயில் நிலையம் பகுதியில் சக்திவேல் என்பவரின் இருசக்கர வாகனமும், திருவரங்கம் அம்மா மண்டபம் சாலையில் ராஜேஷ் என்பவரின் இருசக்கர வாகனமும், உறையூரில் சரண்யா என்பவரின் இரு சக்கர வாகனம்மும் திருடு போனது. இது குறித்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவுசெய்து, சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் தீவிரமாக கண்காணித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.