Rock Fort Times
Online News

திருச்சி மாநகர திருட்டு வழக்குகளில் ஒரு வாரத்தில் 21 பேர் கைது.

திருச்சி மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு வழக்குகளில் வழிப்பறி மற்றும் திருடப்பட்ட ரூ.3,50,000/- லட்சம் மதிப்புள்ள செல்போன், தங்க நகை, இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனம் மற்றும் பணத்தை மீட்டும், குற்றச்செயல்களில் ஈடுபட்ட 21 நபர்கள் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா ஐ.பி.எஸ், திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பணம், செல்போன், இரண்டு சக்கர வாகனங்கைைள திருடியதாக பெறப்பட்ட புகார்களின் மீது துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி திருச்சி மாநகரத்தில், கடந்த 15.03.2023-ந்தேதி முதல் கடந்த ஒரு வார காலமாக கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் பறிக்கப்பட்டதாக 3 வழக்குகளும், 2 சவரன் தங்க செயின் பறிக்கப்பட்டதாக 1 வழக்கு உட்பட 4 வழக்குகளும், ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் பறிக்கப்பட்டதாக 3 வழக்குகளும், கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் பறிக்கப்பட்டதாக 1 வழக்கு மற்றும் பணம் ரூ.1000/- பறிக்கப்பட்டதாக 1 வழக்கும், எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பாக 2 வழக்குகளும், பாலக்கரை காவல் நிலையத்தில் மூன்று சக்கர வாகன ஆட்டோ திருடுபோனது தொடர்பாக 1 வழக்கும், அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் செல்போன் பறிக்கப்பட்டதாக 1 வழக்கும், உறையூர் காவல் நிலையத்தில் கேஸ் சிலிண்டர் திருடுபோனதாக 1 வழக்கு உட்பட மொத்தம் 15 வழக்குகள் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் எதிரிகளை தீவிரமாக கண்காணித்தும், சந்தேக நபர்களின் விபரங்களை சேகரித்தும், சம்மந்தப்பட்ட பகுதிகளில் CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் மேற்படி வழக்குகளில் சம்மந்தப்பட்ட ஒரு இளங்குற்றவாளிகள் உட்பட, 21 குற்றவாளிகளை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பியும் வழக்கின் சொத்தான 8 செல்போன்கள், பணம் ரூ.2,500/-, 2 சவரன் தங்க நகை, 2 இருசக்கர வாகனம், 1 மூன்று சக்கர வாகனம் மற்றும் ஒரு கேஸ் சிலிண்டர் என மொத்தம் ரூ.3,50,000/- மதிப்புள்ள வழக்கின் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. மேற்கண்ட வழக்கில் சிறப்பாக பணியாற்றி துரிதமாக புலன்விசாரணை செய்து எதிரிகளை கைது செய்தும், வழக்கின் சொத்துக்களை மீட்ட காவல் அதிகாரிகள், தனிப்படையினர் மற்றும் புலன்விசாரணையில் துணையாக இருந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்