திருச்சியின் பரபரப்பான பகுதிகளில் ஒன்று கீழ ஆண்டாள் வீதி. சுற்றியும் ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.இப்பகுதியில் தான் பிரசித்தி பெற்ற உச்சிப் பிள்ளையார் தாயுமான சுவாமி கோயிலும் உள்ளது. இந்நிலையில் மலைக்கோட்டை பின்புறம் கீழ ஆண்டாள் வீதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் பிணமாக இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் டவுன்ஹால் கிராம நிர்வாக அதிகாரி அனீஸ் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்ததோடு, போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதியவரின் பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் . மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ?எதற்காக இங்கு வந்தார் ?எப்படி இறந்தார் ? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி கிழக்கு ஆண்டாள் வீதியில் முதியவர் ஒருவர் சடலமாக கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.