Rock Fort Times
Online News

திருச்சி: லாரியில் மயங்கி கிடந்த டிரைவர் மரணம்….

உடலை வாங்க மறுத்து போராட்டம்..

திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகன் கமலக்கண்ணன் (வயது 44). பால் டேங்கர் லாரி டிரைவரான இவர், கொட்டப்பட்டு ஆவின் பால் பண்ணைக்கு பால் கொண்டு வந்து இறக்கி விட்டு லாரியில்  படுத்திருந்தார். அப்போது ஆவின் ஊழியர், கமலக்கண்ணனை பார்க்க வந்தார். அப்போது கமலக்கண்ணன் லாரியில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கமலக்கண்ணனின் மனைவி காயத்ரி கொடுத்த புகாரின் பேரில் திருச்சி கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் இறந்து போன கமலக்கண்ணனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரி சிஐடியு சார்பில் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிணவறை முன்பு அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்