திருச்சி, தென்னூரில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்த மர் ம போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் முசிறி, எம்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (51). இவர் தென்னுார், குப்பன்குளம் டாஸ்மாக்கில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் டாஸ்மாக்கை பூட்டிவிட்டு வீட்டுக்குசென்றார். காலை திரும்பிவந்து பார்த்தபோது டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது, உள்ளிருந்த பொருட்கள் ஏதும் திருட்டுபோகவில்லை. இது குறித்து கிருஷ்ணகுமார் அளித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.