சென்னை ஐகோர்ட்டின் வழக்கு தீர்ப்பை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களாலும், பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து தமிழகம் எங்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன்படி திருச்சியில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி ப.குமார் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்…ஒன்றிய கழக செயலாளர் ss.ராவணன் SKD.கார்த்திக், பகுதி கழக செயலாளர் M.பாலசுப்ரமணியம்,A.தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் P.சாந்தி, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் K.S.பாஸ்கர் ,VDM.அருண் நேரு, N.கார்த்திக், S.ராஜமணிகண்டன், M.சுரேஷ்குமார், M.P.ராஜா, ஒன்றிய கவுன்சிலர் பொய்கைகுடி த.முருகா, திருவெறும்பூர் அவைத்தலைவர் அண்ணாதுரை, முருகானந்தம், துவாக்குடி நகர அவைத்தலைவர் சுரேஷ்குமார், துணை செயலாளர் கணபதி, வட்ட கழக செயலாளர்கள் S.ராஜா, கே.பி.சங்கர், C.முத்துகுமார், ஆபிரகாம், அபிமன்யு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.