திருச்சி கே.கே நகர், காஜாமலை காலனியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மூத்தமகன் துரைசிங்கம். (17), சஞ்சீவி நகரிலுள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி,தெப்பக்குளம் பகுதியில் உள்ள நேஷனல் பள்ளியில் +2 படித்து வந்துள்ளார், இவரை உடன் படிக்கும் சக மாணவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆசிரியரிடம் தெரிவித்தும் மாணவர்களை கண்டிக்காததால், மாணவர் துரை சிங்கம் மன உளைச்சலில் பள்ளிக்குச் செல்லாமல் இருந்துவந்துள்ளார். இந்த நிலையில், இவரது தந்தை ராமச்சந்திரன், வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள படுக்கை அறையில் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக கே.கே நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், மாணவன் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா ? வேறு ஏதும் காரணமா என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.