மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட 24வது மாநாடு திருவெறும்பூர் அருகேயுள்ள தனியார் மஹாலில் கடந்த 7,8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. லெனின்,சீத்தா, ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சி. தர்மா ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாநாட்டு கொடியினை மூத்த தோழர் பி.சுப்பிரமணியன் ஏற்றினார்.கே.சி பாண்டியன் வரவேற்றார். கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் மாநாட்டை துவக்கி வைத்தார்.சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான கே.பாலபாரதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக கோ. வெற்றி செல்வன் தேர்வு செய்யப்பட்டார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.ஸ்ரீதர் ஆர்.ராஜா, எஸ்.ரெங்கராஜன், எஸ்.ரேணுகா, பா.லெனின்,என்.கார்த்திகேயன், வி.மணிமாறன், எஸ்.சந்தானம் ஆகியோர் கொண்ட மாவட்ட செயற்குழுவும் 31 பேர் கொண்ட மாவட்ட குழுவும் செய்யப்பட்டது. முடிவில் காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார். இதில் கட்சியின் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி,வட்டக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.