திருச்சி, மன்னார்புரம் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் !
தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள, கட்டுமான தொழிலாளர்களுக்கு முந்தைய ஆட்சி காலத்தில் வழங்கி தற்போது நிறுத்தப்பட்டுள்ள பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூ. 5 ஆயிரத்தை வழக்கம்போல் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் நல சங்கத்தினர், திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாணவர் மாவட்ட செயலாளர் ரங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன், பொருளாளர் மணிகண்டன், மாநில குழு உறுப்பினர் செல்வி, புறநகர் மாவட்ட தலைவர் தியாகராஜன், மாவட்ட செயலாளர் பூமாலை ஆகியோர் பேசினர். இதில் தொழிலாளர் நல வாரியத்தில் விண்ணப்பித்துள்ள அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் நிபந்தனைகளை தளர்த்தி வீடுகளை உடனே வழங்க வேண்டும் பென்ஷன் தொகையான ரூ. 3000 வழங்க வேண்டும். நேரடி பதிவை துவங்க வேண்டும். கட்டுமான தொழிலாளி மற்றும் ஓய்வூதியம் பெரும் தொழிலாளி மரணம் அடைந்தால் உதவித்தொகையை விரைந்து வழங்க வேண்டும். ஆன்லைன் சர்வரை சரி படுத்த வேண்டும். நலவாரிய கூட்ட முடிவுகளை அமலாக்க அரசாணை வெளியிட வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு கூட்டத்தை மாத மாதம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Comments are closed.