திருச்சி தில்லைநகர் 5-வதுகிராஸ் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். வழக்கறிஞரான இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் தென்னூர் நோக்கி செல்லும்போது, தில்லைநகர் 11வது கிராஸ் பகுதியில் அவருக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு நபர் ரூ. 50,000 நோட்டு கட்டு ஒன்றை தவறவிட்டார். உடனே ரஞ்சித் தனது வாகனத்தை நிறுத்தி அந்த பணத்தை எடுத்துக் கொண்டு தவறவிட்டவரை துரத்திச் சென்றார். ஆனால் போக்குவரத்து நெரிசலில் அவரது வாகனம் சிக்கிக் கொண்டதால் பணத்தை தவறவிட்டவர் அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் நண்பர்களுடன் அந்தப் பணத்தை தில்லை நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான தகவலை பதிவிட்டுள்ளனர். இன்று மதியம் வரை பணத்தை இழந்தவரின் விவரம் எதுவும் தெரியவில்லை. சாலையில் தவறவிட்ட பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வழக்கறிஞரை போலீசார் பாராட்டினர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.