Rock Fort Times
Online News

இப்படித்தான் இருக்குது திருச்சி ஜங்ஷன் பேருந்து நிறுத்தம்…

நடவடிக்கை எடுப்பது எப்போது?

திருச்சி மாவட்டத்தின் இதயம் போன்ற பகுதி ஜங்ஷன் பகுதியாகும். இங்குதான் ரயில் நிலையம் அமைந்துள்ளது. ரயில் நிலையத்தின் எதிரே ‘ஜங்ஷன் பேருந்து நிறுத்தம்’ உள்ளது. உள்ளூரில் உள்ள பெரும்பாலான பயணிகள் மற்றும் ரயில்களில் வரும் பயணிகள் இந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சத்திரம் பேருந்து நிலையம், பாலக்கரை, காந்தி மார்க்கெட் மற்றும் ஸ்ரீரங்கம் போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். பயணிகளின் நலன் கருதி இங்கு நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிழற்குடையின் மேற்கூரைகள் மற்றும் பின்புற பகுதிகள் சேதமடைந்து காணப்படுகின்றன.

இதனால், மழை பெய்யும்போது நிழற்க்குடையின் உள்ளே மழைநீர் விழுகின்றன. மேலும், நிழற்குடைக்கு அருகே குப்பைகளும் நிறைந்து கிடக்கின்றன. இந்த நிழற்குடைக்கு அருகில் டாஸ்மாக் கடை செயல்படுவதால் காலியான மது பாட்டில்களும், பிளாஸ்டிக் கப்புகளும் குவிந்து கிடக்கின்றன. இவற்றைப் பார்க்கும் பஸ் பயணிகள் முகம் சுளிக்கின்றனர். சில பெண்கள், பஸ் நிறுத்தத்திற்கு சற்று முன்பே நின்று விடுகின்றனர். ஆகவே, இந்த நிழற்குடையை சீரமைத்து குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்