திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 43). திருச்சி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். திருமணமான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இதய நோய் பிரச்சனை காரணமாக ராமதாசுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவரது மனைவி, கணவர் பிணமாக தொங்கியதை கண்டு கதறி அழுதார்.இதுகுறித்த தகவலின்பேரில் சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் நலக்குறைவு காரணமாக ராமதாஸ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.