திருச்சி: பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்….
திமுக கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் வழங்கினார் ....
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் சங்கரன் பிள்ளை ரோட்டில் அமைந்துள்ள சாவித்திரி வித்யாசாலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 450 பேருக்கு விலை இல்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திருச்சி கிழக்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி மண்டலம் 3-ன் தலைவருமான மு.மதிவாணன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர் மணிமேகலை ராஜபாண்டி, பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.