பொறியியல் பணிகள் காரணமாக ஈரோடு, பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி- ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வருகிற 18, 20, 23, 25, 28, 31 ஆகிய தேதிகளில் திருச்சி -கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஈரோடு-திருச்சி பயணிகள் ரயிலானது (56106)
வருகிற 18 ஆம் தேதி ஈரோடு – கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, திருச்சி- பாலக்காடு விரைவு ரயிலானது (16843)
வருகிற 20, 28 ஆம் தேதிகளில் கரூர்- பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.