தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனை சார்ந்த பணியிடங்களில் உள்ளவர்கள் நேற்று திடீரென மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும் விருதுநகர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, தருமபுரி, கன்னியாகுமரி, திருச்சி, திருவள்ளூர், விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருச்சி முதன்மை கல்வி அலுவலா் சிவக்குமாா் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். மேலும், 7 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக தற்காலிக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.