Rock Fort Times
Online News

மீண்டும் ஒளிருமா இந்திரா காந்தி சிலை- வேதனையில் காங்கிரஸ் மனு

திருச்சி புத்தூர் சிக்னல் நால்ரோட்டில் முன்னாள் பாரதப் பிரதமர இந்திரா காந்தி திரு உருவ சிலை உள்ளது. இந்த சிலைக்கு மாநகராட்சி சார்பில் மின்விளக்குகள் போடப்பட்டுள்ளன. ஆனால் சரிவர எரிவதில்லை . சிலைக்கு அருகிலேயே பள்ளிகள், பயணிகள் பஸ் நிறுத்தம் உள்ளன .ஆனால் அருகிலேயே அரசு மதுபான டாஸ்மார்க் கடை உள்ளது. இதனால் மது பிரியர்களின் பாராக மாறிவிட்டது. சிலையை சுற்றி ஒரே பாட்டில்களாக உள்ளன. இதனால் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வண்ணம் நிலைமை உள்ளது .தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும் ,மாநில பொதுக்குழு உறுப்பினருமான வழக்குரைஞர் சரவணன் தலைமையில்  மாவட்ட ஆட்சியரை  நேரில் சந்தித்து உடனடியாக அரசு மதுபான கடையை அகற்றிட உத்தரவிட வேண்டும் , மாநகராட்சி ஆணையரிடம் விளக்குகள் சரிவர எரிய வைக்க ஆவணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி கவுன்சிலருமான ரெக்ஸ், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் மலைக்கோட்டை முரளி, ஜீவா நகர் மாரிமுத்து, சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் ,சோசியல் மீடியா மாநில தலைவர் அபுதாகிர் ,கிழக்கு தொகுதி இளைஞர்கள் தலைவர் முகமது ரஃபி, ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல்,மார்க்கெட் சம்சுதீன்,பாலக்கரை மாரியப்பன் ,வழக்கறிஞர்கள் கிருபாகரன் ,சுகன்யா கோகுல், சிந்தை வினோத் ரியாஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்