திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்ட இரண்டாம் கட்ட நிகழ்ச்சி நடைபெற்றது .மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை வகித்தார்.இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம், பதிவாளர் கணேசன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
