Rock Fort Times
Online News

திருச்சி ஐயப்பன் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்…

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற  ஐய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல பூஜை விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதையொட்டி சங்காபிஷேகம் நடைபெற்றது. தந்திரி கண்டரு மோகனரு சங்காபிஷேகத்தை நடத்தி வைத்தார். இதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் கொடியேற்றம் நடைபெற்றது. வருகிற 13-ந்தேதி இரவு பள்ளி வேட்டையும், 14-ந்தேதி மாலை 4 மணிக்கு காவிரியில் ஐய்யப்பனுக்கு ஆராட்டும், மாலை 6.30 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறுகிறது. வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நிறைவுபெறுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்