அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ள, தமிழ்நாடு அரசினை கண்டித்து 14.3.2023, காலை 10:30 மணி அளவில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், அதில் தலைமை அதிமுக கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு, வட்ட கழக நிர்வாகிகள் மாநகர, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் அழைப்பு விடுத்துள்ளார்.