22.2.2018 ல் ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பதவிகளை அனுமதிக்க வேண்டும், நிரந்தர தன்மை வாய்ந்த பதவிகளை அவுட்சோர்சிங் விடுவதை கைவிட வேண்டும், ரிடெவலப்மெண்ட் முறைக்கு செல்லக்கூடாது, இளைஞர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்க வேண்டும், அரசாணை 100 அடிப்படையில் பணியாளர்கள் ஏற்றுக்கொள்கின்ற வகையில் அரசு உத்தரவாதத்துடன் கூடிய முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், பிபி எண் 2 நாள் 12. 4. 2022 முழுமையாக ரத்து செய்ய வேண்டும், 1 .12. 2019 முதல் மின்வாரிய பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு உள்ளிட்ட பணப்பயன்களை நிலுவைத்தவுடன் உடனே வழங்க வேண்டும், மின்வாரிய பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் கோட்டையை நோக்கி பேரணி விளக்க வாயிற் கூட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். பொறியாளர் சங்க மாவட்ட தலைவர் நரசிம்மன், எம்ப்ளாயீஸ் பெடரேஷன் செயலாளர் சிவசெல்வம், அண்ணா தொழிற்சங்க ஸ்ரீகுமார், ஐக்கிய சங்க ஆலயமணி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் எஸ். கே.செல்வராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்