திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் மதுமிதா (வயது 23).இவர் திருச்சி காஜாமலையில் உள்ள ஈவேரா அரசு கல்லூரியில் கடந்த ஆண்டு எம்.காம் முடித்தார். அதற்கான சான்றிதழை வாங்குவதற்காக தாய் அகிலாவுடன் கல்லூரிக்கு சென்றார். கல்லூரி அருகாமையில் சென்றபோது திடீரென மதுமிதா மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மதுமிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சர்க்கரை வியாதி மற்றும் சிறுநீரக பிரச்சனைக்காக மதுமிதா சிகிச்சை பெற்று வந்தது தெரிய வந்தது. ஆகவே, உடல் நலக்குறைவால் மாணவி மரணம் அடைந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.