திருச்சி, அரியமங்கலம் விறகு கடை தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது பைசல் (வயது 35). இவரது மனைவி ரிஸ்வான் பர்வீன்.இந்த தம்பதியருக்கு இடையே கடன் பிரச்சனை தொடர்பாக ஏற்பட்டது. பின்னர் பர்வீன் சுய உதவி குழுவுக்கு கடன் தவணைத் தொகை செலுத்துவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். பிறகு சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது முகமது பைசல் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Comments are closed.