Rock Fort Times
Online News

திருச்சியில் துணிகர சம்பவம்: கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு…* 2 வாலிபர்களுக்கு வலை!

திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். இவரது மனைவி ஜனனி (வயது 27). இவர், தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் மன்னார்புரம் பகுதியில் மதுரை பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம வாலிபர்கள் ஜனனி கழுத்தில் அணிந்திருந்த இரண்டே முக்கால் பவுன் தாலி செயினை அறுத்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து ஜனனி கொடுத்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து, நகையை பறித்துச் சென்ற வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்