Rock Fort Times
Online News

பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஆசிரியர்களை கல்வித்துறையிலிருந்து தூக்கி எறியுங்க ! அப்துல் சமது எம்.எல்.ஏ ஆவேசம்!

மனிதநேய மக்கள் கட்சியின் 17 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, திருச்சி மேற்கு மாவட்டம் சார்பில் கழக கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, 500 புதிய உறுப்பினர்கள் இணையும் மனிதநேய மக்கள் கட்சி பெருவிழா, உள்ளிட்ட முப்பெரும் விழா, திருச்சி தென்னூர் அண்ணா நகரில் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்ட தலைவரும், திருச்சி மாநகராட்சி கவுன்சிலருமான பைஸ் அகமது தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இப்ராகிம், தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராகிம்,மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரும், மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்எல்ஏ அப்துல் சமது கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.எல்.ஏ அப்துல் சமது., மணப்பாறை அருகே தனியார் பள்ளி மாணவி பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட விவகாரம் மக்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும்,காவல்துறையும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு 5 பேரை கைது செய்துள்ளது. இது போன்ற பாலியல் விவகாரங்களில் கைது மட்டுமே தீர்வாக அமையாது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செல்வது போல் பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஆசிரியர்கள் கல்வித்துறையில் இருந்தே தூக்கி எறியப்பட வேண்டும். கல்வித்துறையில் மீண்டும் நுழையாதபடி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்என ஆவேசமா க பேசினார்..

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்