தமிழ்நாடு அரசு பாதுகாப்பை திரும்ப பெற்றதால் எனது உயிருக்கு அச்சுறுத்தல்..!- முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பரபரப்பு
மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். இவர் ஆட்சியராக இருந்தபோது மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டார். இதனால் அரசுக்கு ஏற்பட்ட பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு வெட்ட வெளிச்சமானது. இது தொடர்பான வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஜராக சகாயத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், கோர்ட்டில் ஆஜராக முடியாது எனக்கூறி சகாயம் விளக்க கடிதம் ஒன்றை அரசு வழக்கறிஞருக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழ்நாடு அரசு தனக்கு வழங்கி இருந்த பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொண்டது. இதனால் என் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. எனவே பாதுகாப்பு காரணங்களால் என்னால் ஹைகோர்ட்டில் ஆஜராக முடியாது எனக் கூறியுள்ளார்.
Comments are closed.