திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் –மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு, தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலைய பகுதிகளில் உள்ள ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் மின் வாரியத்தால் நாளை (28.11.2023) காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக மண்டலம்-1 மேலூர், தேவி ஸ்கூல், பாலாஜி அவென்யூ, பெரியார் நகர், திருவானைக்காவல், அம்மாமண்டபம், மண்டலம்-2, சுந்தராஜ நகர் புதியது, சுந்தராஜபுரம்,காஜாமலை, மண்டலம்-3 அரியமங்கலம், மலையப்ப நகர் பழையது, ரயில்நகர் , மகாலெட்சுமி நகர், முன்னாள் ராணுவத்தினர் காலனி , மேல கல்கண்டார் கோட்டை , செக்ஸன் ஆபிஸ், நாகம்மை வீதி, பொன்னேரிபுரம், பொன்மலைப்பட்டி, ஐஸ்வர்யா நகர், மண்டலம்-4 ஜே.கே. நகர், செம்பட்டு, காமராஜ் நகர், எல்ஐசி காலனி, காலனி, கே. சாத்தனூர், விஸ்வநாதபுரம், சுப்பிரமணிய நகர், தென்றல்நகர், இபி காலனி, வி.என். நகர், சத்தியவாணி முத்து நகர், கே.கே நகர், சுப்பிரமணிய நகர், ஆனந்த நகர், கே.சாத்தனூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், கவிபாரதி நகர், எடமலைப்பட்டிபுதூர், கிராப்பட்டி, அன்புநகர் ,ரெங்கா நகர், மண்டலம்-5 மங்கலம் நகர், சிவாநகர், உறையூர், பாத்திமா நகர், ரெயின்போ நகர், செல்வா நகர், ஆனந்தம் நகர் பாரதிநகர் ஆகிய பகுதிகளுக்கு 29.11.2023 அன்று குடிநீர் விநியோகம் இருக்காது. மறுநாள் 30.11.2023 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். ஆகவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.