திருச்சி கே.கே.நகர் பகுதியில் அதிக அளவில் குடியிருப்புகளை கொண்ட பகுதியாக உள்ளது ஐயப்ப நகர். 63 தெருக்களைக் கொண்ட இந்த பகுதி வீடுகளில் அதிக அளவில் பாதுகாப்பு கேமராக்கள் அமைக்கப்படாததால் அதிக அளவு கொள்ளைகள் நடைபெற ஏதுவாக உள்ளது .இந்த நிலையில் திருச்சி கே.கே நகர் இந்திரா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ராகவன் வயசு 46 .இவர் கட்டிடங்களுக்கான பொருட்கள் விநியோகிக்கும் பணி செய்து வருகிறார். இவரது மனைவி நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தனது அம்மா வீடு உள்ள பீமநகர் பகுதிக்கு சென்று விட்டார் .இன்று காலை வீட்டு வேலை செய்வதற்காக வந்த பணியாளர் வீட்டில் கதவு திறந்து இருப்பதை கண்டார் உடனடியாக ராகவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த ராகவன் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோவினை உடைத்து அதன் உள்ளிருந்த 3 ‘/2 பவுன்தங்க நகை,ஒரு ஜோடி கொலுசு மற்றும் ரூபாய் பத்தாயிரம் பணம் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது . கே.கே நகர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார் .சம்பவ இடத்திற்கு வந்த கே.கே நகர் காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில் கே.கே நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயா விசாரணை நடத்தி வருகின்றனர்.

Prev Post
ஸ்ரீரங்கத்துக்கு வரி செலுத்தாமல் வந்த மராட்டிய மாநில சுற்றுலா பஸ்சுக்கு ரூ.37 ஆயிரம் அபராதம்
Next Post