Rock Fort Times
Online News

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்…போலீசுடன் மோதல்-தள்ளுமுள்ளு 45 பேர் கைது!

சட்டமேதை அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பதிவிட்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி கிழக்கு மாநகர மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமையில் ஜங்ஷன் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் கவுன்சிலர் ந. பிரபாகரன் முன்னிலை வகித்தார். ரயில் நிலையத்திற்கு உள்ளே நுழைய முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தில் இளம் சிறுத்தைகளின் எழுச்சி பாசறை மாநிலத் துணைச் செயலாளர் அரசு, மற்றும் நிர்வாகிகள் வழக்கறிஞர் சதீஷ், மாரியப்பன், கஸ்தூரி, செல்வகுமார், இனியவன், பிரபு, மணிகண்டன், ஞானம், முத்து, சேகர், ஆல்பர்ட்ராஜ், சகாயம், மீரான், பீர்முகமது, ரவிச்சந்திரன், விஜயன்
மகளிர் அணி நிர்வாகி கஸ்தூர்உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்