Rock Fort Times
Online News

பெண்ணிடம் செல்போன் நம்பர் கேட்ட சம்பவம்: 6 பேரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி வடக்குத் தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 50). தச்சுவேலை செய்து வருகிறார். இவரது மகன் யுவராஜ். இவர் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவியிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது செல்போன் எண்ணை கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அந்தப் பெண் தனது கணவரிடம் தெரிவித்தார். இதனால் கண்ணன், யுவராஜ் மீது ஆத்திரத்தில் இருந்தார். இந்நிலையில் தமிழரசனின் சகோதரி மகனுக்கு கடந்த சில தினங்க ளுக்கு முன்பு திருப்பைஞ்சீலியில் திருமணம் நடந்தது. அதேநாளில் திருப்பைஞ்சீலியில் கண்ணனின் நண்பர் வீட்டு கிரகப்பிரவேசம் நடைபெற்றது. அப்போது கண்ணன், தனது நண்பர்கள் சிலருடன் யுவராஜின் வீட்டிற்குச்சென்று அங்கிருந்த அவரது தாத்தா ராமச் சந்திரன், அவரது அத்தை விஜயா, அப்பகுதியைச் சேர்ந்த நடராஜன் உள்பட 6 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராமன் வழக்குப்பதிவு செய்து திருப் பைஞ்சீலி வடக்கு தெருவை சேர்ந்த சரவணன் மகன் சந் தோஷ் (22), சுப்ரமணி மகன் மதன் (21), ஆறுமுகம் மகன் கண்ணன் (24), சிறுகாம்பூர் மணத்தோப்பு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் கிருஷ்ணகோபால் (22), வடக்கு சித்தாம்பூரைச் சேர்ந்த ராசுமணி மகன் அழகேசன் (20) ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்