Rock Fort Times
Online News

தேவர் குருபூஜை பாதுகாப்புக்கு வந்த பெண் தலைமை காவலர் திடீரென உயிரிழப்பு…!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் நாளை (அக்.30) முத்துராமலிங்கத் தேவரின் 63-வது குருபூஜை மற்றும் 118-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதன் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு 8000 போலீசார் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வருகை தந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தலைமை காவலர் கலைவாணி (41) என்பவரும் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்தார். இவர் நேற்று இரவு 12 மணியளவில் கமுதியில் உள்ள தனியார் பள்ளியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது இருமல் தொடர்ச்சியாக ஏற்பட ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த கலைவாணியின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்