Rock Fort Times
Online News

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிச்சாச்சு!

தமிழகத்தின் பிரசித்திப்பெற்ற ஆன்மீக திருத்தலங்களில் ஒன்றாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது.முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான இக்கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி முருகரை மனமுருகி வழிபட்டு செல்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு இதற்கான பணிகள் தற்போது முழு மூச்சாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் கும்பாபிஷேகத்துக்கான நாள் தேர்வு செய்வதில் மட்டும் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 7 ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்