Rock Fort Times
Online News

திருச்சியில் கட்டப்பட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம்… * அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் திறந்து வைத்தனர்!

திருச்சி, ராஜா காலனியில் முதன்மை பள்ளிக் கல்வி அலுவலர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா இன்று(10-01-2026) நடைபெற்றது. விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் பங்கேற்று கட்டிடத்தை திறந்து வைத்துப் பார்வையிட்டனர். விழாவில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் லி.மதுபாலன், மண்டல தலைவர் மு.மதிவாணன், முதன்மை கல்வி அலுவலர் கோ.கிருஷ்ண பிரியா, மாவட்ட நகர் ஊரமைப்பு குழு உறுப்பினர் வைரமணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்